Saturday, May 28, 2011

எதையும் தாங்குவோம்


எதையும் தாங்குவோம்

எதையும் தாங்குவோம் எத்தனை நாளே
எண்ணிப் பாரீர் தாங்குமா தோளே
உதையும படுவார் மீனவர் நாளும்
உயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்
சதையும் கிழிந்திட சிந்துவார் இரத்தம்
சகிப்பதா நம்மவர் நடந்திட நித்தம்
வதையும் அன்னவர் வாழ்ந்திட மீண்டும்
வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்

கச்சத் தீவை கயவர்கள் கையில்
காரண மின்றி கொடுத்த வகையில்
அச்ச மற்றவர் ஆணவச் செயலில்
ஆடும் ஆட்டம் சொல்லிப் பயனில்
துச்சம் அவரென துரத்துவோம் இன்றே
துடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே
மிச்சம் இன்ற அனைவரும ஓட

புலவர் சாஇராமாநுசம்

2 comments :

  1. துடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே
    மிச்சம் இன்ற அனைவரும ஓட

    சத்திய வார்த்தைகள் ஐயா
    மீனவர் படும் துன்பம் சொல்லி மாளாது - இது
    மத்திய அரசின் மதியில் ஏறாது

    ReplyDelete
  2. ஒற்றுமை தான் பலமானது என்பதனை நிரூபிக்க வேண்டி நிற்கிறது உங்களின் கவிதை ஐயா, மத்திய அரசின் செவிகளுக்கு மீனவர் துன்பத்தை எப்படிப் புரிய வைப்பது எனும் கேள்விக்கான பதிலையும் உங்கள் கவிதை தத்ரூபமாகச் சொல்லி நிற்கிறது.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...